முதலமைச்சரின் அமைச்சின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 பயனாளிகளுள் 14 பேருக்கு வீடமைப்புத் திட்ட உதவித்தொகையின் முதற்கட்ட கொடுப்பனவாக தலா ரூபா 150,000.00, 04 ஒக்ரோபர் 2017 அன்று அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு, முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் அமைச்சின் உதவித் தொகையாக ரூபா 850,000.00 வழங்கப்படுவதுடன் பயனாளியின் பங்களிப்பு தொகை 55,000.00 ரூபாவினையும் சேர்த்து வீட்டின் பெறுமதி ரூபா 905,000.00 ஆகும்