பணிக்கூற்று
வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.
வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.
வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெற்றிடங்களை நிரப்புவத்காக நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சைகளில் தோற்றி தெரிவானவர்களுக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே வழங்கி வைத்தார்.
பிரதிப்பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி சரஸ்வதி மேகநாதன் தலைமயில் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் 17 செப்ரெம்பர் 2018 அன்று இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம், பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
73 பயிலுனர் அபிவிருத்தி உத்தியோகத்தகள், 42 சாரதிகள் 19 கைதடி முதியோர் இல்ல பராமரிப்பாளர்கள் ஆகியோர் நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ”அரசாங்க வேலை செய்வோருக்கு வழங்கப்படும் ஊதியம் துன்பப்பட்ட மக்களின் வரிப்பணத்திலேயே வழங்கப்படுகின்றது. அது எனது பணமோ செயலாளர்களின் பணமோ அல்லது அரசியல்வாதிகளின் பணமோ கிடையாது. மக்களின் பணத்தில் சம்பளம் வாங்கும் எமக்கு ஒரு கடமை இருக்கின்றது. அதுதான் அவர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதாகும்” என தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில் ”அரசாங்க சேவையில் இணைந்து கொள்ளும் அனைவரும் நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களின் அபிவிருத்திக்காகவும் நேர்மையான உண்மையான சேவையினை பாகுபாடு இன்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
வடமாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புதவற்கு அதிகாரிகள் முழு முயற்சி எடுத்துவருகின்றார்கள். அதற்கான அனுமதியினை வழங்குவது எனது கடமை அதனை முழுமையாக நான் செய்ய தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்தார்.