உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா 17.71 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அலுவலக கட்டடம் வடமாகாண முதலமைச்சர் அவர்களின் சார்பில் கலந்துகொண்ட வடமாகாண சபையின் மகளிர் விவகார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் திருமதி.அனந்தி சசிதரன் அவர்களால் 04 யூலை 2017 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து அவர்கள் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களை 29 யூன் 2017 அன்று முதலமைச்சர் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி ரூபா 10.25 மில்லியன் மற்றும் கரைச்சி பிரதேச சபை நிதி ரூபா 10 மில்லியன் செலவில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி சந்தைக் கட்டடம் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 12 யூன் 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் சுற்றுலா துறையின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதி ரூபா 3.6 மில்லியன் செலவில் அழகுபடுத்தப்பட்ட கரைத்துறைப்பற்றுப் பிரதேசசபையின் முல்லை கடற்கரை 09 யூன் 2017 அன்று முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மணற்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களுக்கான விடுதியானது முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 09 யூன் 2017 அன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூபா 8.78 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் வற்றாப்பளை நீர் வழங்கல் திட்டம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 09 யூன் 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.